தொழில்நுட்பம்
கோப்புப்படம்

எக்ஸ் ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்

Published On 2020-11-30 06:50 GMT   |   Update On 2020-11-30 06:50 GMT
எக்ஸ் ரே மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு நுரையீரல் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். 

டீப்கொவிட் எக்ஸ்ஆர் (DeepCOVID-XR) என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மூலம் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பத்து மடங்கு வேகமாகவும், அதிக துல்லியமாகவும் கண்டறிகிறது.



இதுபற்றிய ஆய்வு கட்டுரை ரேடியாலஜி இதழில் வெளியாகி இருக்கிறது. இது கொரோனா தவிர வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் ஆய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

இந்த தொழில்நுட்பம் பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிவதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்தி, அடுத்தக்கட்ட சிகிச்சையளிக்க முடியும்.
Tags:    

Similar News