தொழில்நுட்பம்
போக்கோ

புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2020-11-24 06:36 GMT   |   Update On 2020-11-24 06:36 GMT
போக்கோ இந்தியா பிராண்டு புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

போக்கோ பிராண்டு இந்திய சந்தையில் தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக போக்கோ எக்ஸ்2 மற்றும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், புதிய எப் சீரிஸ் மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.

போக்கோ எப்1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. போக்கோ எப்2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போக்கோ எப்2 ப்ரோ முந்தைய போக்கோ எப்1 மாடலின் சரியான அப்டேட் ஆக இருக்காது.



புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா மற்றும் பொது மேலாளர் மன்மோகன் ஆகியோர் சமீபத்திய ASK ME ANYTHING நிகழ்வில் தெரிவித்து இருக்கின்றனர்.  

அந்த வகையில் போக்கோ எப்1 மாடலின் மேம்பட்ட மாடலாக போக்கோ எப்2-வை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த மாடல் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News