தொழில்நுட்பம்
நோக்கியா 2.4

அடுத்த வாரம் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2020-11-18 04:17 GMT   |   Update On 2020-11-18 04:17 GMT
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.


ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் இந்தியா சமூக வலைதள பக்கங்களில் டீசர் வடிவில் அறிவித்து இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 2.4 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. டீசர் வீடியோவில் ஸ்மார்ட்போனின் பின்புறம் மட்டும் தெரியும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்

6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
அதிகபட்சம் 3 ஜிபி ரேம்
அதிகபட்சம் 64 ஜிபி மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
13 எம்பி பிரைமரி கேமரா
2 எம்பி டெப்த் சென்சார்
5 எம்பி செல்பி கேமரா
4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
4500 எம்ஏஹெச் பேட்டரி

சர்வதேச சந்தையில் நோக்கியா 2.4 விலை 119 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 10,500 என முதல் துவங்குகிறது. இதன் இந்திய விலை அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News