தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் நார்டு

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்திய வெளியீடு உறுதியானது

Published On 2020-07-01 04:59 GMT   |   Update On 2020-07-01 04:59 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒன்பிளஸ் நார்டு என அழைக்கப்பட இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் புதிய வீடியோவில் தெரியப்படுத்தி இருக்கிறது. ஒன்பிளஸ் வெளியிட்ட வீடியோ ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளின் போது எடுக்கப்பட்டதாகும்.

நான்கு பாகங்களாக வெளியாக இருக்கும் வீடியோ சீரிஸ் இரண்டாவது வீடியோ ஜூலை 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போதைய வீடியோவின் ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போன் ஒன்று டூயல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 32 எம்பி மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

மேலும் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஐரோப்பா மற்றும் இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News