தொழில்நுட்பம்
இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேல்க்ஸி ஏ50 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.19,990 மற்றும் ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கேலக்லஸி ஏ 50 ஸ்மார்ட்போனின் இருவித வேரியண்ட்களின் விலையில் ரூ.1500 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் ரூ.1500 விலை குறைக்கப்பட்டு ரூ.18,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.21,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9610 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் பிக்ஸ்பி விஷன், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி ஹோம் மற்றும் பிக்ஸ்மி ரிமைன்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க 25 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா, லைவ் ஃபோகஸ் மற்றும் 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.