அறிந்து கொள்ளுங்கள்

ரகசியமாக 19 ரூபாய்க்கு புது ரீசார்ஜ் பேக்-ஐ அறிமுகப்படுத்தியது பி.எஸ்.என்.எல் நிறுவனம்

Published On 2022-07-26 07:15 GMT   |   Update On 2022-07-26 07:15 GMT
  • பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும்.
  • உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலான பயனர்கள் இந்த மூன்று நிறுவனங்களில் ஏதாவது ஒன்றைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பயனர்களை கவர்வதற்காக குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் திட்டங்களை இந்நிறுவனங்கள் வழங்கி வந்தன.

ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, இந்த மூன்று நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் விலைகளை கிடுகிடுவென உயர்த்தி விட்டன. அந்நிறுவனங்கள் மலிவான விலையில் வழங்கி வந்த திட்டங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது.


அதன்படி பி.எஸ்.என்.எல் நிறுவனம் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, அழைப்பு கட்டணம் 20 பைசாவாக குறைகிறது. இதன்பின் வேறு எந்த ரீசார்ஜும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கவலையின்றி மாதம் முழுவதும் காலிங்க் வசதியை பெறலாம். உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

Tags:    

Similar News