உள்ளூர் செய்திகள்
கடலூரில் பெண்ணை தாக்கியவர் கைது
- ரவி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி சென்று உள்ளார்.
- இது குறித்து கண்ணன் தனது மனைவி சரோஜாவிடம் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சரோஜா (வயது 58) இவர்கள் வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி சென்று உள்ளார். இது தொடர்பாக கண்ணன், ரவியிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ரவி ,கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணன் தனது மனைவி சரோஜாவிடம் தெரிவித்தார். அப்போது இது தொடர்பாக சரோஜா, ரவியிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ரவி சரோஜாவை தாக்கி மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சரோஜா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சரோஜா கொடுத்த புகாரின் பேரில் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.