நவராத்திரி ஸ்பெஷல்

நவராத்திரியின் 2-ம் நாள் இன்று..! பிரம்மச்சாரிணி தேவிக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரம்

Published On 2025-09-23 09:30 IST   |   Update On 2025-09-23 09:31:00 IST
  • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
  • துர்கையின் இரண்டாம் வடிவமான பிரம்மசாரிணி தேவியை வணங்குவதாகும்.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபடப்படுகிறது.

இதில், நவராத்திரியின் இரண்டாம் நாளில் துர்கையின் இரண்டாம் வடிவமான பிரம்மசாரிணி தேவியை வணங்குவதாகும்.

பிரம்மசாரிணி தேவிக்கு உரிய மந்திரம்:

ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நமஹ.

விளக்கம்: ஓம் பிரம்மசாரிணி தேவிக்கு வணக்கம்.

இந்த மந்திரத்தின் மூலம் ஒழுக்கம், மன உறுதி மற்றும் பக்தியை வளர்த்துக் கொள்ளலாம். 

Tags:    

Similar News