நவராத்திரி ஸ்பெஷல்

நவராத்திரி 3-ம் நாளில் செய்ய வேண்டிய பிரசாதம்..!

Published On 2025-09-24 09:30 IST   |   Update On 2025-09-24 09:30:00 IST
  • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
  • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

அதன்படி, நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பச்சை பயறு சுண்டல், எலுமிச்சை சாதம் மற்றும் ரவை கேசரி செய்து துர்கைக்கு படைக்கலாம். முதலில், பச்சை பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..

பச்சை பயறு சுண்டல்:

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சில இலைகள்

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

* பச்சை பயறை நன்கு கழுவி, போதுமான தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

* ஊறிய பயறை உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

* வெந்த பச்சை பயறில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்து, தனியாக வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* இப்போது கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

* வடித்து வைத்துள்ள பச்சை பயறை வாணலியில் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

எலுமிச்சை சாதம்:

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப் (வேகவைத்து, ஆறவைத்தது)

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1.5 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1.5 டீஸ்பூன்

வேர்க்கடலை - ½ கப்

கறிவேப்பிலை - 1 கொத்து

பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை - ½ 

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

கடுகு வெடித்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.

அனைத்தையும் கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.

இந்தக் கலவையை ஆறவைத்த சாதத்துடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமாக வழங்கலாம்.

ரவை கேசரி

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி மற்றும் திராட்சை

சர்க்கரை அல்லது பனை வெல்லம்

தண்ணீர் அல்லது பால்

ஏலக்காய் தூள்

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுக்கவும்.

* அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் நன்றாக வறுக்கவும்.

* தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த ரவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

* ரவை வெந்ததும், சர்க்கரை அல்லது பனை வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.

* கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.

Tags:    

Similar News