null
நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்- மூன்றாம் நாள் இன்று..!
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் இரண்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
மூன்றாம் நாள் போற்றி
ஓம் அறிவினுக்கறிவேபோற்றி
ஓம் ஞானதீபமேபோற்றி
ஓம் அருமறைப் பொருளேபோற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி
ஓம் நற்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
ஓம் பரமனின் சக்தியேபோற்றி
ஓம் பாபங்கள் களைவாய்போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி
ஓம் அகிலத்தின் காப்பேபோற்றி
ஓம் செம்மேனியளேபோற்றி
ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையேபோற்றி