புதுச்சேரி

கோப்பு படம்.

தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளி கல்வித்துறை

Published On 2023-05-07 13:35 IST   |   Update On 2023-05-07 13:35:00 IST
  • ஆசிரியர் பெருமக்களிடம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • கல்வி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் விருப்ப மில்லாமல் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் கல்வித் திட்டத்தை அமல்படுத்த அவசரகதியில் தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளி கல்வித்துறை செயல் கண்டனத்துக்குரியது.

புதுவை அரசானது தற்போது தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது திடீரென மத்திய அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்து அதற்கான பணியினை அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் ஈடுபடுத்தி செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக மத்திய அரசின் பாடத்திட்டத் திற்கு மாறுவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படு த்துவது மிகுந்த கண்டனத்து க்குரியது. மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கு பதிவு செய்திட ஓரிரு தினங்களை கொடுத்து கால அவகாசம் கொடுக்காமல் அவசரகதியாய் ஒரு குழு கூட்டம் மட்டும் நடத்தி தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

இது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.கல்வி அமைச்சரை திருப்தி ப்படுத்து வதற்காக இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது பள்ளிக் கல்வித் துறையின் வேலை. ஒரு குறுகிய அதிகாரம் கொண்ட தலைமை ஆசிரி யர்களை நெருக்கடி கொடுத்து இயக்குனர் செயல்பாடு அமைந்து ள்ளதாக தெரிகிறது. எந்தவிதமான தரவுகள் இல்லாமல் மத்திய அரசின் பள்ளி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News