புதுச்சேரி

காரைக்கால் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

Published On 2023-10-15 13:05 IST   |   Update On 2023-10-15 13:05:00 IST
  • புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது.
  • ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

புதுச்சேரி:

காரைக்கால் டூப்ளக்கஸ் வீதியில், மளிகை கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார், சம்பந்தப்பட்ட கடையில் சோதனைச் செய்தபோது அங்கு ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லெமேர்வீதியைச்சேர்ந்த கடை உரிமையாளர் முகமது முஜாஹிதீனை (வயது23) கைது செய்தனர்.

Tags:    

Similar News