புதுச்சேரி
கோப்பு படம்.
மாணவர், இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
- சங்க தலைவர்கள் முருகன், உதயராஜ் தலைமை வகித்தனர்.
- இந்தியகம்யூ நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி, மாணவர் பெருமன்ற செயலாளர் முரளி நோக்கவுரையாற்றினர்.
புதுச்சேரி:
இந்திய மல்யுத்த விளை யாட்டு வீராங்கணைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷண் சரண்சிங்கை பதவிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுவை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர்கள் முருகன், உதயராஜ் தலைமை வகித்தனர்.
நிர்வாகிகள் சிவராம கிருஷ்ணன், உமாசங்கரி, பிரவீன், ஆகாஷ் முன்னிலை வகித்தனர். இந்தியகம்யூ நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி, மாணவர் பெருமன்ற செயலாளர் முரளி நோக்கவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர், இளைஞர் பெருமன்றத்தினர் பலர் கலந்துகொண்டனர்.