புதுச்சேரி

அனிபால்கென்னடி எம்.எம்.ஏ நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.

7 ஆண்டு கால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

Published On 2023-05-12 13:49 IST   |   Update On 2023-05-12 13:49:00 IST
  • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.க்கு பொது மக்கள் பாராட்டு
  • கிளை செயலாளர் ராகேஷ், துணை கிளை செயலாளர் பாலாஜி மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 2 பகுதியை சார்ந்த அழகர்சாமி வீதி மற்றும் ரங்கநாதன் வீதிகளில் 7 வருட காலமாக பொதுப்பணித்துறை மூலம் விநியோகிக்கப்படும் குடித்தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அனிபால்கென்னடி எம்.எம்.ஏவிடம் மனு அளித்தனர். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை துணைப் பொறியாளர் வாசன், செயற்பொறியாளர் முருகானந்தம், இளநிலை ப்பொறியாளர் வெங்கடேசன், ஆகியோரிடம் அனிபால்கென்னடி எம்.எம்.ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு வைத்தார்.

அவரின் தொடர் முயற்சியால் 7ஆண்டு காலமாக நிலவி வந்த குடி நீர் பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது.

தற்போது அனைத்து பொது மக்கள் வீட்டிலும் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ.வை பாராட்டினர்.

தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜு, கிளை செயலாளர் ராகேஷ், துணை கிளை செயலாளர் பாலாஜி மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்

Tags:    

Similar News