புதுச்சேரி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியில் ரூ.12 லட்சம் செலவில் பல்வேறு பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.

சாலை-குளம் ஆழப்படுத்தும் பணிகள்சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-13 10:36 IST   |   Update On 2023-01-13 10:36:00 IST
  • புதுவை மாநிலம் மணவெளி ெதாகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் பணி நடைபெற்றது.
  • ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் மணவெளிதொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் மற்றும் பூரணாங்குப்பம் பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஊறுதி திட்டத்தின் மூலம் டி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் நகரில் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 400 செலவில் மண் சாலை அமைத்தல் மற்றும் பூரணாங்குப்பம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட சந்திரகுளத்தை ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் செலவில் ஆழப்படுத்துதல், காட்டுவா குட்டையில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் செலவில் பராமரிப்பு செய்தால் என மொத்தம் ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 400-க்கான பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், வேளாண் கடன் வழங்கும் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News