புதுச்சேரி

கோப்பு படம்.

மருத்துவ மாணவர் கலந்தாய்வு குறித்துபுதுவை அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

Published On 2023-05-12 08:13 GMT   |   Update On 2023-05-12 08:13 GMT
  • மாணவர், பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்
  • புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசு கட்டுபாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளின் 100-சதவீத இடங்களையும் இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் மூலம் தான் கலந்தாய்வு நடத்தப்படும். அனைத்து மாநில அரசுகளுக்கும் அரசு ஒதுக்கீடு மற்றும் இடஒது க்கீடு குறித்த விபர ங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான மாநில அரசின் பெறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

அதற்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தி இந்த மாதத்திலேயே முடிவு செய்து மருத்துவ கலந்தாய்வு நடத்த உள்ளதாக தெரிய வருகின்றது.

இதனால் புதுவை மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் மாநில அரசின் சாதி அடிப்ப டையிலான இடஒதுக்கீடும், பிற இடஒதுக்கீடுகளும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.

ஆகவே புதுவை அரசு 2023-24-ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை சென்டாக் மூலம் நடத்துமா? தேசிய மருத்துவ ஆணையம் நடத்துமா? என்ற விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News