புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்த ஊர்  பொது மக்கள்.

கென்னடி எம்.எல்.ஏ.வுடன் பொதுமக்கள் சந்திப்பு

Published On 2023-05-09 14:24 IST   |   Update On 2023-05-09 14:24:00 IST
  • வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் கோவில் இடத்தில் தற்போது பேச்சி அம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்து வந்தது.
  • அப்போது தனியார் ஒருவர் இது அவருடைய இடம் என்று கூறினார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் கோவில் இடத்தில் தற்போது பேச்சி அம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது தனியார் ஒருவர் இது அவருடைய இடம் என்று கூறினார்.

இதை அறிந்த எம்.எல்.ஏ. மற்றும் ஊர் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று தனியார் இடம் என்று கூறும் தனி நபரை தனது அலுவலகம் வர வைத்து பொதுமக்கள் நலன் காக்கும் விதமாக ஊர் மக்களின் விருப்பத்திற்கேட்ப கோவிலுக்கு சாதகமாக பிரச்சனையை சமூகமாக தீர்த்து வைத்தார். இதையடுத்து திடீர் போராட்டம் நடந்தது. பின்னர் தி.மு.க அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அப்போது பொதுமக்கள் மத்தியில் தவறு செய்து மோசடி நபராக இருந்தால் அவர்கள் தண்டிக்க படுவார்கள், அதேபோல் அந்த இடம் உண்மையில் ஒருவருக்கு சொந்தமெனில் அதை பாதுகாக்க வேண்டியது அரசு கடமை என்று கூறிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த மக்கள் மீண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். கோவில் இடத்தை மக்களுக்கு பெற்று தருவேன் என்று உறுதி அளித்தார்.

Tags:    

Similar News