புதுச்சேரி

 புதுவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

மீனவ இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்

Published On 2023-05-11 12:21 IST   |   Update On 2023-05-11 12:21:00 IST
  • அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி செய்ய வேண்டும்.
  • முதியோர் உதவித்தொகை கடந்த 2 மாதங்களாக வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவன தலைவர் இரா. அன்ப ழகனார் ஆலோசனைபடி புதுவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை, புதுவை மாநில தலைவர் புகழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆலோசகர்கள் புத்துப் பட்டார், ராமஜெயம், கலைவரதன், பொதுச்செய லாளர்கள் சிட்டிபாபு, குணசீலன், துணைத் தலைவர் ஜெயவேலு, செயலாளர்கள் சுகுமார், சிவக்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அவை வருமாறு:-

புதுவை மாநில மீனவ சமுதாய இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி செய்ய வேண்டும்.

வருகிற காலங்களில் அரசியல் அதிகாரத்தில் உரிய பங்களிப்பு பெறுவது. முதியோர் உதவித்தொகை கடந்த 2 மாதங்களாக வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Tags:    

Similar News