புதுச்சேரி

கோப்பு படம்.

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-05-24 13:50 IST   |   Update On 2023-05-24 13:50:00 IST
  • நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் புதுக் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்
  • இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நாகராஜன் கடந்த சில தினங்களாக உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் மனமுடைந்த நாகராஜன் நேற்று வீட்டில் ஜன்னல் கம்பியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இவரது மனைவி இரிசம்மாள் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags:    

Similar News