என் மலர்
நீங்கள் தேடியது "Painter hanged"
- சில நாட்களாக தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வினோபா நகரை சேர்ந்தவர் பெரிய சாமி. இவரது மனைவி பிரமிளா (வயது45). இவர்க ளுக்கு நவீன் ( 24), பிரவின் (22) என்ற மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகன் நவின் பெரிய சாமியுடனும், இளையமகன் பிரவின் பிரமிளாவுடனும் வசித்து வருகின்றனர்.
கொசக்கடையில் உள்ள ஒரு மெஸ்சில் வேலை செய்யும் பிரமிளா மகனுடன் மரியாள் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இதனிடையே பிரவின் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன் றுள்ளார். இதனால் அவருக்கு நரம்பு பாதிக்கப் பட்டுள்ளது. இதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்காமல் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சில நாட்களாக தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் பயந்து போன பிரமிளா மகனை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரமிளா வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது பிரவின் வீட்டில் தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் புதுக் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்
- இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நாகராஜன் கடந்த சில தினங்களாக உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் மனமுடைந்த நாகராஜன் நேற்று வீட்டில் ஜன்னல் கம்பியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இவரது மனைவி இரிசம்மாள் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்






