கோப்பு படம்.
- சில நாட்களாக தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வினோபா நகரை சேர்ந்தவர் பெரிய சாமி. இவரது மனைவி பிரமிளா (வயது45). இவர்க ளுக்கு நவீன் ( 24), பிரவின் (22) என்ற மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூத்த மகன் நவின் பெரிய சாமியுடனும், இளையமகன் பிரவின் பிரமிளாவுடனும் வசித்து வருகின்றனர்.
கொசக்கடையில் உள்ள ஒரு மெஸ்சில் வேலை செய்யும் பிரமிளா மகனுடன் மரியாள் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இதனிடையே பிரவின் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன் றுள்ளார். இதனால் அவருக்கு நரம்பு பாதிக்கப் பட்டுள்ளது. இதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்காமல் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சில நாட்களாக தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் பயந்து போன பிரமிளா மகனை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரமிளா வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது பிரவின் வீட்டில் தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.