புதுச்சேரி
- புதுவைக்கு வந்த சிமெண்ட் லாரி நேற்று இரவு வில்லியனூரில் இருந்து பத்துகண்ணு பகுதியை நோக்கி சென்றது
- நிலை குலைந்த லாரி டிரைவர் விஜயகுமார் லாரியை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றார்.
புதுச்சேரி:
விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த சிமெண்ட் லாரி நேற்று இரவு வில்லியனூரில் இருந்து பத்துகண்ணு பகுதியை நோக்கி சென்றது. அப்போது எதிரே வந்த கார் திடீரென நிலை தடுமாறி லாரி மீது மோதுவது போல் வந்தது. இதில் நிலை குலைந்த லாரி டிரைவர் விஜயகுமார் லாரியை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றார்.
ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் விஜயகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகளை வேறு வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.
இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.