புதுச்சேரி

கோப்பு படம்.

கத்தியுடன் ரவுடி கைது

Published On 2023-05-08 13:47 IST   |   Update On 2023-05-08 13:47:00 IST
  • சோதனை செய்தபோது கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
  • போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அரசூர் பகுதியில் ரோந்து பனி சென்றனர். அப்போது அங்குள்ள சாராயக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த வரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி (32) என்பதும், இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

அவரை சோதனை செய்தபோது கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News