புதுச்சேரி

ஆட்டோ டிரைவரை நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த பக்கத்து வீட்டுக்காரர்- முன் விரோதத்தில் கொடூர சம்பவம்

Published On 2023-07-14 03:52 GMT   |   Update On 2023-07-14 03:52 GMT
  • வாழுமுனிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தேர்முட்டி வீதியைச் சேர்ந்தவர் வாழுமுனி (வயது 40). ஆட்டோ டிரைவர். வாழுமுனிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று வாழுமுனி குடும்பத்துக்கும், ஹரிகிருஷ்ணன் குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு குடும்பத்தினருக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது ஹரிகிருஷ்ணன் மகன் செந்தில்குமார், அவரது மனைவி சுமதி ஆகியோர் தாங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை ஏவி வாழுமுனியை கடிக்க விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாழுமுனியின் மனைவி சங்கரி மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர்.

அவர்கள் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது, செந்தில்குமாரின் உறவினர்களான சிங்காரவேலன், மாதேஷ் ஆகியோர் மீண்டும் வாழுமுனியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து வாழுமுனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News