புதுச்சேரி
மருத்துவ முகாமினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
- தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது.
- தொகுதி எம்.எல்.ஏவும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது.
புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் தவளகுப்பம் பகுதியில் உள்ள லலிதா நகரில் இன்று நடைபெற்றது.
இந்த இலவச பொது மருத்துவ முகாமினை தொகுதி எம்.எல்.ஏவும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்து வர்கள் செங்கதிரேசன், மடோனா டிசோசா மற்றும் புதுவை வேளாண் அறிவியல் நிறுவன தாளாளர் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.