புதுச்சேரி

கோப்பு படம்.

போதை பொருள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Published On 2023-05-15 14:42 IST   |   Update On 2023-05-15 14:42:00 IST
  • நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
  • தப்பாட்டம், வில்லுப்பாட்டு, உடுக்கை, பம்பை, கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

புதுச்சேரி:

புதுவை சமூகநலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 புதுவை அரசு சமூகநலத்துறை மூலம் போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தெருக்கூத்து, பொம்மலாட்டம், நாட்டுப்புறப்நடனம், சிலம்பம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு, உடுக்கை, பம்பை, கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

எனவே புதுவை, காரைக்காலில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த தகுதிவாய்ந்த கலைஞர்கள் குழுவிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலைஞர்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்துடன் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை இணைத்து இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மாநிலம் தழுவிய விளையாட்டு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு செய்யவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tags:    

Similar News