கிருமாம்பாக்கத்தில் காங்கிரஸ் பிரமகர் மோகன்தாஸ் தலைமையில் இனிப்பு வழங்கிய காட்சி
காங்கிரஸ் பிரமுகர் மோகன்தாஸ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- கிருமாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
- நிகழ்ச்சிக்கு ஏம்பலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீர மணிகண்டன் முன்னிலை வகுத்தார்.
புதுச்சேரி:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து புதுவையில் பல இடங்களில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஏம்பலம் தொகுதியில் சமூக சேவகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகரமான மோகன்தாஸ் தலைமையில் கிருமாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைவீதிகளிலும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். மேலும் கட்சி நிர்வாகிக ளுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்த குமரேசன், கனிக்கண்ணன், பாஸ்கர், சன் டிவி பாஸ்கர், சண்மு கம், நாராயணன் துரைசாமி, ராதா, பிள்ளையார்குப்பம் சண்முகப்பிரியன், நரம்பை ராஜேந்திரன், கனகசபை, நடராஜன், பனித்திட்டு ப ஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி, சேகர், அன்பரசு, சிவக்குமார், அசோகன், கிருமாம்பாக்கம் ரவிச்சந்திரன், அருணாச்சலம், வார்டு ரத்தினம், பாலு,
விஸ்வநாதன், முத்து சேலியமேடு அய்யனார், ஆதிக்கப்பட்டு ரங்கநாதன், அரங்கனூர் கிருஷ்ண மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் தனசேகர், அருள், கோர்க்கா டு சசிதரன் மற்றும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டணர். இந்த நிகழ்ச்சிக்கு ஏம்பலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வீர மணிகண்டன் முன்னிலை வகுத்தார்.