புதுச்சேரி

கோப்பு படம்.

பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது

Published On 2023-05-20 11:19 IST   |   Update On 2023-05-20 11:19:00 IST
  • ரகளையில் ஈடுபட்ட வரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
  • பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

புதுச்சேரி:

பாகூர் அருகே சோரியாங்குப்பம் அய்யனார் கோவில் அருகே  ஒருவர் பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட வரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த புஷ்பராஜ் வயது 43) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News