உலகம்
null

அணு ஆயுத மிரட்டலுக்கு பணிய மாட்டோம் - ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டம்

Published On 2025-09-27 08:00 IST   |   Update On 2025-09-27 10:35:00 IST
  • இந்தியாவிடம் முக்கிய பயங்கரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
  • இருநாட்டு பிரச்சனைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்து கொள்ளும்.

ஐ.நா. சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதியான மனிதர் என்று புகழாரம் சூட்டினார். தெற்காசியாவில் அமைதி நிலவ பங்காற்றிய டிரம்ப்க்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென மீண்டும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறி இருந்தார். இதற்கு இந்தியா பதில் அளித்துள்ளது. ஐ.நா. அவையில் இந்திய பிரதிநிதி கூறியதாவது:

* பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் அனைத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும்.

* இந்தியாவிடம் முக்கிய பயங்கரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

* பயங்கரவாதிகள், பயங்கரவாதத்திற்கு உதவுவோரை விட்டு வைக்கும் எண்ணமில்லை.

* அமைதியை பாகிஸ்தான் விரும்புகிறது என்றால் பயங்கரவாதத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

* அணு ஆயுத மிரட்டலுக்கு பணிய மாட்டோம்.

* அணு ஆயுத மிரட்டலின் பின்னணியில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கிறது.

* இருநாட்டு பிரச்சனைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்து கொள்ளும்.

* இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் நபர் தலையீடுக்கு இடமில்லை என்று இந்திய பிரதிநிதி திட்டவட்டமாக கூறினார்.

Tags:    

Similar News