உலகம்

எலான் மஸ்கிடம் வேலை பார்ப்பது கடினம்: டெஸ்லா துணை தலைவர் திடீர் ராஜினாமா

Published On 2024-08-23 16:42 IST   |   Update On 2024-08-23 16:42:00 IST
  • டெஸ்லா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம் அந்நிறுவனத்தில் இருந்து விலகினார்.
  • எலான் மாஸ்க்கிடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாஷிங்டன்:

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News