உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு

Published On 2025-04-23 16:40 IST   |   Update On 2025-04-23 16:40:00 IST
  • அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்.
  • இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல்.

துருக்கி இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அறலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Tags:    

Similar News