உலகம்

அவர் பயங்கரவாதி அல்ல, சாதாரண மனிதர் - இறுதிச்சடங்கில் பங்கேற்றது குறித்து பாகிஸ்தான் விளக்கம்

Published On 2025-05-13 15:23 IST   |   Update On 2025-05-13 15:44:00 IST
  • உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் என்பவர் ஒரு சாதார மனிதர்
  • ஹபீஸ் அப்துல் ரவூஃப் தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.

காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ் தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் தீவிரவாதிகள் யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவூப், முதாசீர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவர்களது இறுதி சடங்கு பாகிஸ்தானில் உள்ள முரிட்கே பகுதியில் நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டி னன்ட் ஜெனரல் பயாஸ் ஹூசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிக்கே டியர் முகமது புர்கான், பஞ்சாப் மாகாண காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் உஸ்மான் அன்வர் மற்றும் மாலிக் சோஹைப் அகமது ஆகியோர் கலந்து கொண்ட னர்.

இந்த இறுதி சடங்கில் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப் பட்ட ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட குவாரி அப்துல் மாலிக், காலித், முதாசீர் ஆகியோர் ஜமாஅத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாகவும், முரிட்கேயில் உள்ள மசூதியின் காப்பாளர்களாகவும் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.

இவர்களின் உடல்கள் பாகிஸ்தான் தேசியக் கொடியால் சுற்றப்பட்டு பாகிஸ்தான் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மட்டு மின்றி பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்-மந்திரி மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மருமகள் ஆகியோர் கலந்து கொண்டு, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்தனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைபாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த வீடியோ மூலம் சர்வதேச தீவிரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூப் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஹபீஸ் அப்துல் ரவூப் 1999-ம் ஆண்டு முதல் லஸ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினராகவும், தடை செய்யப்பட்ட பலா-இ-இன்சானியத் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடை பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹபீஸ் அப்துல் ரவூப்பை 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் கொண்ட சாதாரண மனிதர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானில் பொதுச்சேவைகள், பொது உறவுகள் அமைப்பின் அதிகாரியான அகமது செரீப் சவுத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹபீஸ் அப்துல் ரவூப் 1973-ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது குடும்ப விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்" என காட்டினார்.

இதற்கிடையே, ஆபரே ஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படத்தை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டு பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்தார். இது பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை காட்டுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

Tags:    

Similar News