உலகம்

வடகொரியா அதிபரின் சகோதரிக்கு பதவி உயர்வு

Published On 2026-02-25 14:38 IST   |   Update On 2026-02-25 14:38:00 IST
  • அதிபர் கிம் ஜாங் உன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஆளும் கட்சி அமைப்பில் துணைத்துறை இயக்குனராக இருந்த கிம் யோ ஜாங் முழுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-வது மாநாடு, தலைநகா் பியாங்யாங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆளும் கட்சி மாநாட்டில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங்வுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அமைப்பில் துணைத்துறை இயக்குனராக இருந்த கிம் யோ ஜாங் முழுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிம் யோ ஜாங் தனது சகோதரரின் நெருங்கிய துணைத் தலைவர்களில் ஒருவராகவும், ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News