உலகம்
நான்காம் ஆண்டு நிறைவு: மனித வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் அதிகாரி பலி
- உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
- ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
மாஸ்கோ:
உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
நான்காவது ஆண்டு நிறைவை குறிக்கும் நாளில், ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோவில் சவ்யோலேவ்ஸ்கி ரயில் நிலையம் அருகே நள்ளிரவு போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் போக்குவரத்து போலீசார் வாகனம் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் இதில் உயிரிழந்தார்.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.