உலகம்

விரைவில் முடியும் என நம்புகிறேன்: இந்திய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published On 2025-05-07 04:13 IST   |   Update On 2025-05-07 04:13:00 IST
  • பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
  • நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

வாஷிங்டன்:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

நாங்கள் ஓவல் மைதானத்தின் வாசலில் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம்.

கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏதோ நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

அவர்கள் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பற்றி யோசிக்கும்போது பல நூற்றாண்டுகளாக. இல்லை, அது மிக விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News