உலகம்
கொலை

ஒரு லட்ச ரூபாய்க்காக திருமண வயது வராத மகளுக்கு திருமணம்: தடுத்த மனைவியை கொன்ற கணவன்

Published On 2022-05-30 02:56 GMT   |   Update On 2022-05-30 02:56 GMT
பாகிஸ்தானில் திருமண வயது வராத மகளை ஒரு லட்ச ரூபாய்க்காக திருமணம் செய்து கொடுக்க முயன்ற போது தடுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாடு :

பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல பணத்திற்காக விற்று விட்டதாகவும் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். செஹ்வான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, பாப்லி ஜிஸ்கானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News