செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதிய விபத்தில் இருவர் பலி

Published On 2018-11-24 12:05 GMT   |   Update On 2018-11-24 12:54 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். #Afghanarmy #armyhelicopter #crashlanding
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் இருந்து மருஃப் மாவட்டத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி, நொறுங்கி தீபிடித்தது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஜாவெத் கபூர் தெரிவித்துள்ளார்.



இதற்கிடையில் அந்த ஹெலிகாப்டரை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று அப்பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். #Afghanarmy #armyhelicopter #crashlanding
Tags:    

Similar News