செய்திகள்

பாரிஸில் சுற்றுலா பயணிகளின் வினோத புகாருக்கு மேயர் அளித்த உணர்வுப்பூர்வமான பதில்

Published On 2018-09-02 10:31 GMT   |   Update On 2018-09-02 12:31 GMT
பாரீஸின் பிக்சரெஸ்கியூ கிராமத்தில் பூச்சிகள் அதிகம் சப்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாக மேயரிடம் சுற்றுலா பயணிகள் புகார் அளிக்க, அது எங்கள் பகுதியின் சங்கீதம் என மேயர் உருக்கமாக பதிலளித்துள்ளார். #Paris #Cicadas
பாரீஸ்:

உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்றான பாரீஸ் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். அவ்வாறு பிக்சரெஸ்கியூ எனும் கிராமத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள், மேயரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் அப்பகுதியில் சுற்றித்திரியும் குறிப்பிட்ட வண்டு இன பூச்சிகள் அதிகம் சப்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

வண்டுகள் காலையிலும், மாலையிலும் தொடர்ந்து சப்தமிட்டு தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வானொலி மூலம் பதிலளித்த அப்பகுதி மேயர் ஜியார்ஜஸ் ஃபெர்ரேரோ, இந்த சப்தம் புதிதாக வந்த சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கலாம், ஆனால் இது இப்பகுதி மக்களின் சங்கீதம் என அவர்கள் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலா பயணிகள் சில பூச்சி மருந்துகள் கொண்டு அவற்றை அகற்ற முயற்சிப்பதாகவும், அது மிகவும் முட்டாள்தனமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சப்தத்தை புதிதாக இங்கு வருபவர்கள் எதிர்த்தாலும் பரவாயில்லை ஆனால், ப்ரெஞ்சின் பூர்வீக குடிமக்களும் இதனை தொந்தரவாக எண்ணுகிறார்கள் என மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். #Paris #Cicadas
Tags:    

Similar News