செய்திகள்
பாகிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் - துணை ராணுவ வீரர்கள் 3 பேர் பலி
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவ படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். #ISattack #pakistanisoldierskilled
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் அதிகப்படியான வளங்களை ஒதுக்கக்கோரி சமீபகாலமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மஸ்தூங் நகரின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் தொடர்புடைய இணையதளத்தில் முகமது அல் குரசானி, ரித்வான் அல் குரசானி ஆகிய 2 பயங்கரவாதிகளே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #ISattack #pakistanisoldierskilled
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் அதிகப்படியான வளங்களை ஒதுக்கக்கோரி சமீபகாலமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மஸ்தூங் நகரின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் தொடர்புடைய இணையதளத்தில் முகமது அல் குரசானி, ரித்வான் அல் குரசானி ஆகிய 2 பயங்கரவாதிகளே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #ISattack #pakistanisoldierskilled