தமிழ்நாடு செய்திகள்

ரூ. 2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் எங்கே?- நயினார் நாகேந்திரன்

Published On 2025-10-26 19:31 IST   |   Update On 2025-10-26 19:31:00 IST
  • பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வறட்சியில் தவித்து வருகின்றன.
  • 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறிதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டு "சொன்னீங்களே செஞ்சீங்களா..?" என்கிற தலைப்பில் பதிவிறே்றி வருகிறார்.

அந்த வகையில் இன்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ரூ.2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ. 2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 90-இல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர்மு.க.ஸ்டாலின் அவர்களே?

மருதையாற்றில் திருமானூர், தா.பழூர், கொள்ளிடம் குருவாடி, புளியங்கோம்பை அருகில் காட்டாறு, குண்டேரி, புஞ்சைபுகலூர், நன்னியூர், குளித்தலை ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என்று கொடுத்த வாக்குறுதியைக் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடப்பில் போட்டதால் இன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வறட்சியில் தவித்து வருகின்றன.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி ஏமாந்து, தற்போது தாகத்திற்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிட்டாமல் மக்கள் தள்ளாடும் வேளையில், 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய பொற்கால ஆட்சி இது என்று முழங்குவது வெட்கக்கேடானது.

கொடுத்த வாக்குறுதியை வீசியெறிந்து, தாகத்தில் தவிக்க விட்ட இந்த திமுக அரசு தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நாள் வெகுதூரமில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News