தமிழ்நாடு செய்திகள்

வக்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி பா.ஜ.க வரலாறு படைத்துள்ளது- அண்ணாமலை

Published On 2025-04-04 09:46 IST   |   Update On 2025-04-04 09:47:00 IST
  • வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.
  • வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.

இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளது.

வக்பு சட்டத் திருத்த மசோதா சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வக்பு சொத்துகளின் பாதுகாப்புக்கும் உதவும்.

வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.

வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News