தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2025-08-07 18:55 IST   |   Update On 2025-08-07 18:55:00 IST
  • பீகாரில் 65 லட்சம் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
  • திருவாரூரில் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை (08.08.2025) தமிழகம் முழுவதும் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சிபிஐஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் என்ற பெயரில் பீகாரில் எதிர்கட்சியினர், சிறுபான்மையினர் உள்ளிட்டு 65 லட்சம் பெயர்களை நீக்கியுள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை (08.08.2025) தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை (08.08.2025) மாலை 5.30 மணிக்கு மிண்ட் பேருந்து நிலையம் (வள்ளலார் நகர் பேருந்து நிலையம் எதிரில்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திருவாரூரில் நாளை காலை 10.00 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகில் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாகப்பட்டினத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு புதிய பேருந்து நிலையம் அருகில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன" என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News