தமிழ்நாடு செய்திகள்

புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்..! மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா

Published On 2025-06-21 20:33 IST   |   Update On 2025-06-21 20:33:00 IST
  • நீங்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சி நடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
  • கலைஞர் அவர்கள் திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் தீராக் காதல் கொண்டவர்.

சென்னையில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

கடந்தாண்டு ஜனவரி முதல் ரூ.80 கோடி மதிப்பில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணி நடைபெற்றது. கலையரங்கம், சுற்றுச்சுவர், தூண்கள், நுழைவுவாயில் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், நடைபெறக்கூடிய இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கக்கூடிய அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.

இன்று எனக்கு உணர்வுப்பூர்வமான நாள். இந்தி விழாவுக்காக மட்டுமல்ல, இந்த இடத்திற்காகவும் நான் உணர்ச்சிவப்படுகிறேன்.

உங்களுக்கெல்லாம் மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இந்த பெருமைமிகு வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது.

நீங்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சி நடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் அவர்கள் திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் தீராக் காதல் கொண்டவர்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். நான் எப்போதும் உங்களில் ஒருவன். அரசியலுக்காக, தேர்தலுக்காக இதை செய்யவில்லை உள்ளார்ந்து செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News