தமிழ்நாடு செய்திகள்

காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய் - வைகோ

Published On 2025-11-06 08:42 IST   |   Update On 2025-11-06 08:42:00 IST
  • பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய்.
  • விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.

த.வெ.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதை சுட்டிக்காட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* பொது வாழ்வில் ஆத்திச்சூடியே அறியாதவர் விஜய்.

* கரூர் கொடுந்துயருக்கு முழுக்காரணமான விஜய் பொறுப்பற்று திசை திருப்புகிறார்.

* நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் உள்ளார் விஜய்.

* காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார் விஜய்.

* ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.

* தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளிநகையாட முனைகிறார் விஜய்.

* முதலமைச்சர் மீது வெறுப்பையும், கசப்பையும் கொட்டி தீர்த்திருக்கிறார் விஜய்.

* விஜயின் நிலைமை அனுதாபத்திற்கும் பரிதாபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

* விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News