தமிழ்நாடு செய்திகள்

UPSC தேர்வு முடிவுகள்: தேசிய அளவில் 23ஆம் இடம் பிடித்த சிவச்சந்திரனுக்கு அண்ணாமலை வாழ்த்து

Published On 2025-04-22 17:34 IST   |   Update On 2025-04-22 17:34:00 IST
  • தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
  • தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News