தி.மு.க.விற்கான பிரசாரத்தை தொடங்கி விட்டார் ஆளுநர் - உதயநிதி
- ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.
- எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* நமது நண்பரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கி விட்டார்.
* பாசிச பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஆளுநர் ரவி தி.மு.க.விற்கு பிரசாரம் செய்து வருகிறார்.
* தமிழ்நாடு யாருடன் போராடும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஆளுநர்.
* தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து போராடும் என ஏற்கனவே கூறிவிட்டேன்.
* தமிழை பயின்று வருவதாக கூறி இருக்கிறார் ஆளுநர்.
* ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.
* நேரடியாக தமிழகத்தில் நுழைய முடியாமல் அ.தி.மு.க. தோள் மீது பா.ஜ.க. ஏறி வருகிறது. புதிதாக பலரையும் தேடிக் கொண்டுள்ளது.
* எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.