தமிழ்நாடு செய்திகள்

எல்லா சூழல்களிலும் அண்ணனாக இருப்பேன் - தமிழக பெண்களுக்கு விஜய் கடிதம்

Published On 2024-12-30 07:07 IST   |   Update On 2024-12-30 14:46:00 IST
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
  • தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம்.

நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், "கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது"

"பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மனஅழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்"

"ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே!"

"அதற்காகவே இக்கடிதம்"

"எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்."

"பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம்! - அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் சேர்ந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News