தமிழ்நாடு செய்திகள்

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ... அனுமதி கோரி த.வெ.க.வினர் கடிதம்... பதிலளிக்காத காவல்துறை

Published On 2025-11-26 10:25 IST   |   Update On 2025-11-26 10:25:00 IST
  • கட்சி தொடங்கிய பின்னர் முதன் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார்.
  • த.வெ.க.வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 5-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்கிறார். கட்சி தொடங்கிய பின்னர் முதன் முறையாக புதுச்சேரிக்கு செல்லும் விஜய், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் புதுச்சேரியில் ரோடு ஷோ செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதால் காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், காலப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம் வழியாக சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் என்று கூறப்படுள்ளது. இதற்காக த.வெ.க.வினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, த.வெ.க.வினர் அளித்த கடிதத்திற்கு காவல்துறையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News