தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு தொடங்கியது- உறுப்பினர்கள் கோரிக்கைகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

Published On 2025-10-15 10:03 IST   |   Update On 2025-10-15 10:03:00 IST
  • கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
  • பழைய மாளிகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், மதுரை சுற்றுலா மாளிகையை புதுப்பிப்பது தொடர்பாக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, மதுரையில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு வருவதால் பழைய மாளிகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். 

Tags:    

Similar News