மாநில அரசின் சுயமரியாதையை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது- திமுக எம்எல்ஏ எழிலன்
- தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.
- தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு திணிக்க முயலும் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை திணிக்க முயற்சிக்கிறது.
மாநில அரசின் சுயமரியாதையை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.
ஒற்றை ஆட்சி முறையை திணிக்கும் முயற்சியாகவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப்படுகிறது.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான புயல் பாதிப்பு நிதியைக் கூட மத்திய அரசு விடுவிக்க மறுக்கிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.